செய்திகள்

''கண்மணி அன்போடு...'': நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை பதிவிட்ட விக்னேஷ் சிவன்

DIN

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்திருக்கும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நயன்தாரா கண்மணி என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து   அவரது வேடத்துக்கு அவரே டப்பிங் செய்துள்ளார். இந்தப் படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதியும், கடிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் பட டப்பிங்கின் போது நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனங்களை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT