நாடு முழுவதும் இதுவரை (ஆகஸ்ட் 4) வரை 48.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் புதிதாக 67 பேருக்கு கரோனா: பலி இல்லை
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 48.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33.50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,126 பேருக்கு கரோனா; 195 பேர் பலி
இதில் முதல் தவணையாக 38,07,92,729 கோடி பேருக்கும், இரண்டாது தவணையாக 10,81,43,694 கோடி பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.