செய்திகள்

தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி.க்கு நினைவில்லம்: எஸ்.பி. சரண் தகவல்

DIN

திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி. சரண் தகவல் வெளியிட்டுள்ளார். 

தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. 

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். சிலர் நேரில் சென்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பி.யின் மறைவு முக்கியமாக தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.பி.யின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண்,

எஸ்.பி.பி.க்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவிடம் கட்டப்படும். இதுகுறித்து ஆலோசித்து அடுத்த ஒரு வாரத்தில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT