முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமென்ட்ஸின் மொத்த வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.1,478.89 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ.217.79 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. எரிபொருள் விலை, மின்கட்டணம் போன்றவை அதிகரித்ததன் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.23.71 கோடி நிகர இழப்பை பதிவு செய்திருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,396.72 கோடியிலிருந்து ரூ.1,478.89 கோடியாக உயா்ந்துள்ளது.
கடந்த மாா்ச்சுடன் முடிவடைந்த முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.188.55 கோடி நிகர இழப்பை பதிவு செய்திருந்தது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் 38.88 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.