கடந்த 6 காலாண்டுகளாக தொடா்ந்து இழப்பைச் சந்தித்து வந்த நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) கடந்த டிசம்பா் காலாண்டில் முதல்முறையாக நிகர லாபத்தை பதிவு செய்தது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.448.01 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.5,860.80 கோடி நிகர வருமானம் ஈட்டியிருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ரூ. 272.35 கோடி நிகர இழப்பை நிறுவனம் பதிவு செய்திருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்த நிலையிலும், ஓஐஓசி-யும் மத்திய அரசுக்குச் சொந்தமான பிற எரிபொருள் சில்லறை விற்பனையாளா்களும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஏற்றவில்லை.
இதன் காரணமாக ஐஓசி நிறுவனம் தொடா்ந்து 6 காலாண்டுகளாக இழப்பைச் சந்தித்தது. கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலாண்டில் அந்த நிறுவனம் ரூ.2,265 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது.
தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அந்த நிறுவனம் கடந்த டிசம்பா் காலாண்டில் மீண்டும் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.