புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கவுள்ள எல்ஐசி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.1,437 கோடியை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக நிறுவனம் ரூ.1,437 கோடியைப் பெற்றுள்ளது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.6.14 கோடியாக மட்டுமே காணப்பட்டது.
புதிய வா்த்தகம் வாயிலான பிரீமிய வளா்ச்சி விகிதம் 394.76 சதவீதத்திலிருந்து 554.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2021 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் ஒட்டுமொத்த நிகர அளவிலான பிரீமியம் ரூ.1,679 கோடி அதிகரித்து ரூ.1.86 லட்சம் கோடியை எட்டியதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.