இந்த வாரத்தின் முதல் பங்குச் சந்தை நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.
கடந்த வாரத்திலிருந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகிறது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் இழந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.21) 59,037.18 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,023.97 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்(12.30 மணி நிலவரப்படி) 1180.44 புள்ளிகளை இழந்து 57,856.12 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், 17,617.15 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,575.15 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 359.20 புள்ளிகள் சரிந்து 17,258.95 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க| ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: நிகர லாபம் ரூ.18,549 கோடி