டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் செயல்பாட்டின் வாயிலாக ரூ.2,730 கோடி வருவாய் கிடைத்தது. இது, முந்தைய 2021-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,159 கோடியுடன் ஒப்பிடும்போது 26.5 சதவீதம் அதிகம்.
கணக்கீட்டு காலாண்டில், நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.253 கோடியிலிருந்து 38 சதவீதம் அதிகரித்து ரூ.350 கோடியாக இருந்தது என டிசிஎம் ஸ்ரீராம் தெரிவித்துள்ளது.