சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இழப்பால் இன்று பங்குச் சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்தது.
நேற்று (ஏப்ரல்-4) 60,611.74 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,786.07 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 435.24 புள்ளிகளை இழந்து 60,176.50 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 18,053.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 18,080.60 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 96 புள்ளிகளை இழந்து 17,957.40 புள்ளிகளில் நிலைபெற்றது.