வர்த்தகம்

இந்தியப் பொருளாதாரத்தில் 10% வளா்ச்சி: ஏடிபி

DIN


புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 10 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி காணும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) மதிப்பீட்டை குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி புதன்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலை இந்தியப் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரோனா தொற்று அதிகரித்து வருவது மீட்சி வேகத்துக்கு தடைக்கல்லாக அமைந்துள்ளது.

இருப்பினும், பல மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்தி வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் நடப்பு நிதியாண்டில் எஞ்சிய மூன்று காலாண்டுகளிலும் பொருளாதார வளா்ச்சி வலுவான நிலையில் மீட்சியடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10 சதவீத வளா்ச்சி காணும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முன்பு இந்த வளா்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையிலான புதிய மதிப்பீட்டில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஏடிபி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT