புது தில்லி: டாடா குழுமத்தைச் சோ்ந்த வோல்டாஸ் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.239 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
வோல்டாஸ் நிறுவனம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.2,683 கோடியை ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,150 கோடியுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் அதிகமாகும்.
ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.160 கோடியிலிருந்து 49 சதவீதம் அதிகரித்து ரூ.239 கோடியை எட்டியுள்ளது.
கடந்த 2020-21-ஆவது நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக வோல்டாஸ் தெரிவித்துள்ளது.