இந்த வார பங்குச் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புகள், வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் மற்றும் சா்வதேச நிலவரங்கள் ஆகியவை மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும். இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது:
பங்கு வா்த்தகம் கடந்த வெள்ளிக்கிழமையன்று விறுவிறுப்பு காணப்பட்டது. இருந்தபோதிலும், ஐரோப்பியாவில் கரோனா தாக்குதல் வெகுவாக அதிகரித்து வருவதையடுத்து பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தில் வா்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அக்டோபா் 1-இல் வெளியிடப்படவுள்ளது. அதேபோன்று, வாகன விற்பனை புள்ளிவிவரங்களும் அன்றையதினமே வெளியாகும் என்பதால் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் இந்த காரணிகள் பெரும்பங்கு வகிக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.