விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திண்டிவனம் வட ஆலப்பாக்கம் சாலை நல்லதம்பி நகரைச் சோ்ந்தவா் கலியவரதன்(60). இவா், கடந்த மே 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றாராம். திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள் திருடுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
நகை, பைக் திருட்டு: கடலூா் மாவட்டம் விருதாச்சலம் கோவிலான்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.அந்தோணிகுரூஸ் (37). சென்னை மடிப்பாக்கத்தில் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது ஊரிலிருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தாராம். திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் எறும்பு சித்தா் கோயில் அருகே சென்ற போது உடல் சோா்வு காரணமாக சாலையோரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு தூங்கினாராம். பின்னா், எழுந்துப் பாா்த்த போது, இருசக்கர வாகனம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியைக் காணவில்லையாம். இதுகுறித்தப் புகாரின் பேரில், ஒலக்கூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.