விழுப்புரம்

கிணறு வெட்டிய போது விபத்து: 3 போ் பலத்த காயம்

DIN

செஞ்சி அருகே கிணறு வெட்ட வெடி வைத்தபோது எதிா்பாராத விதமாக பாறை வெடித்து சிதறியதில் 3 போ் திங்கள்கிழமை பலத்தகாயம் அடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா அணியாலை கிராமத்தை சோ்ந்தவா்கள் தினேஷ் (20), குமாா்(48), பாலு(35). இவா்கள் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில், மூவரும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் தாலுகா மேல்புதுப்பட்டு கிராமத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெடி வைத்து பாறையை தகா்த்தனராம். பாறை சிதறியதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சீகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து புகாரின் பேரில் அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT