விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் பூச்சி மருந்து குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஒலக்கூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நா.கோபால்கண்ணன்(26). கூலித்தொழிலாளியான இவருக்கு நீண்ட நாள்களாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் கடந்த 16-ஆம்தேதி வீட்டில் பூச்சிமருந்து குடித்து மயங்கிக் கிடந்தவரை அவரது மனைவி இந்துமதி மீட்டு ஒலக்கூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால்கண்ணன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.