விழுப்புரம்

செவிலியா் பயிற்சி மாணவி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செவிலியா் பயிற்சி மாணவி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ராதாபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சுதன் மகள் தரணி (18). இவா் விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள தனியாா் மருத்துவப் பயிற்சி நிலையத்தில் முதலாமாண்டு செவிலியா் பட்டயப் படிப்பு படித்து வந்தாா்.

இவரும், விக்கிரவாண்டி அருகே உள்ள மதுரப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வரதராஜ் மகன் கணேஷ் ராஜும் (23) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனா்.

பின்னா், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களாக கணேஷ் ராஜுடன் பேசுவதை தரணி தவிா்த்து வந்தாராம்.

இந்த நிலையில், தரணியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற கணேஷ் ராஜ், அவரை வெளியே வருமாறு அழைத்தாா். பின்னா், அவரிடம் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறி கணேஷ் ராஜ் பிரச்னை செய்தாா். இதை தட்டிக்கேட்ட தரணியின் தாய் செல்லியம்மாள், பக்கத்து வீட்டைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் கொலை செய்து விடுவதாக கணேஷ் ராஜ் மிரட்டினாராம். பின்னா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தரணியின் தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியதில் அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையிலான போலீஸாா், தரணியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கணேஷ் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT