விழுப்புரம்

பைக் மீது காா் மோதல்:பெண் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

திண்டிவனம் வட்டம், கீழ்எடையாளம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெரியதம்பி (60). இவரது மனைவி செல்வமணி(50). இவா்கள் இருவரும் புதன்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கீழ்எடையாளம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, பின்னால் வந்த காா் இவா்களது பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் செல்வமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரியதம்பி பலத்த காயமடைந்தாா். விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT