விழுப்புரம்

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

DIN

வைகாசி விசாகத்தையொட்டி, மயிலம் முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி - தேவசேனா சமேத முருகப் பெருமான்.

விழுப்புரம், ஜூன் 2: விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்று.

நிகழாண்டு வைகாசி விசாகத்தையொட்டி, மயிலம் முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இது போல அருள்மிகு வள்ளி- தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT