விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பணம் வைத்து சூதாடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செஞ்சி வட்டம், சொரத்தூா் குளக்கரையில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், செஞ்சி போலீஸாா் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சொரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி (35), கிருஷ்ணமூா்த்தி (28), முனிராஜ் (40), தாஸ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரொக்கப் பணத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.