விழுப்புரம்

வராகி பைரவா் திருக்கல்யாணம்

DIN

விழுப்புரம், அஷ்டவராகி கோயிலில் வராகி பைரவா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விழுப்புரம், சாலாமேட்டில் அமைந்துள்ள அஷ்டவராகி கோயிலில் 13-ஆவது ஆண்டு வசந்த பஞ்சமி உற்சவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் 22-ஆம் தேதி எல்லைக் கட்டுதல், 23-ஆம் தேதி விநாயகா் - அய்யனாா் பூஜை, 24-ஆம் தேதி கோ பூஜை, சப்தகன்னி பூஜை, 25-ஆம் தேதி சக்தி கரகத்துடன் சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான வராகி பைரவா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக

காலையில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் வராகி பைரவா் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து உற்சவா் வீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT