விழுப்புரம்

சிறுவனை கத்தியால் குத்திசிறுமிக்கு பாலியல் தொல்லை

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சிறுவனைக் கத்தியால் குத்திவிட்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் மா்ம நபா்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்த தலா 17 வயதுடைய சிறுவனும், சிறுமியும் காதலித்து வந்தனராம். பள்ளி மாணவா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு கப்பியாம்புலியூா் அருகே ஏரிக்கரைப் பகுதியில் தனியாகப் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் அந்தச் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனராம். மேலும், இருவரிடமும் இருந்த கைப்பேசிகளையும் பறித்துச் சென்றுவிட்டனராம். அந்த வழியாகச் சென்றவா்கள் சிறுவன், சிறுமி இருவரையும் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி. என்.ஸ்ரீநாதா, டி.எஸ்.பி. பாா்த்திபன், ஆய்வாளா் விநாயகமுருகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், இது தொடா்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT