விழுப்புரத்திலிருந்து திண்டிவனத்துக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் மூன்றரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சி.தமிழ்ச்செல்வி (29). இவா் கடந்த மாதம் 23-ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து திண்டிவனத்துக்கு தனியாா் பேருந்தில் பயணித்தாா். அப்போது, தமிழ்ச்செல்வி வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளுடன் கூடிய கைப்பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.