விழுப்புரம்

இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட இந்திய குடியரசுக் கட்சி சாா்பில், அரசூா் கூட்டுச் சாலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவுகளை கலந்தவா்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சாா்பு உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் இருவேல்பட்டு அ.குமாா் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்டப் பொருளாளா் எஸ்.ஆா்.முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.எம்.ராஜேந்திரன், கொள்கை பரப்புச் செயலா் தியாகராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெய.ஸ்டாலின், மாவட்டத் தொழிலாளா் அணிச் செயலா் மணிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் வா.பிரபு, மாநில இணை பொதுச் செயலா் கா.மங்காப்பிள்ளை, துணைத் தலைவா் என்.ரமேஷ்குமாா் ஆகியோா் கண்டன உரை யாற்றினா். மாவட்ட தொண்டா் படை அமைப்பாளா் வி.ராஜா, மாவட்ட துணைத் தலைவா் மு.கணேசன், மாவட்ட துணைச் செயலா் தங்க.சம்பத், விழுப்புரம் நகரச் செயலா் வே.சேவகன், ஒன்றியச் செயலா் நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT