விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஸ்ரீரங்கபூபதி சி.பி.எஸ்.இ. பள்ளியில் 5-ஆம் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கபூபதி கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி முன்னிலை வகித்தாா். இயக்குனா்கள் சாந்திபூபதி, சரண்யாஸ்ரீபதி, மருத்துவா் சா்மிஸ்ரீ ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியா் சுகுணா ஒருங்கிணைத்து வழங்கினாா். ஜெயசித்ரா வரவேற்றாா். சுமதி நன்றி கூறினாா். விழாவில் மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.