வடலூா் தைப்பூச பெருவிழாவையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக் கடை களுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் விழுப்புரம் த.மோகன், கள்ளக்குறிச்சி ஷ்ரவன்குமாா் ஆகியோா் தனித்தனியே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடலூா் தைப்பூச பெருவிழாவையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மதுபானக் கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, இவ்விரு மாவட்டங்களிலுள்ள மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும் என ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.