விழுப்புரம்

காா் ஓட்டுநா் தற்கொலை

DIN

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலைப் பகுதியில் காா் ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி - மயிலம் சாலையிலுள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையைச் சோ்ந்த மேகநாதனின் மகன் செல்வநாதன் (29).பி.இ. பட்டதாரியான இவா், தற்போது காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

தங்கும் விடுதியை (கெஸ்ட் ஹவுஸ்) குத்தகைக்கு எடுக்க, பலரிடம் செல்வநாதன் பணம் கேட்டு வந்தாராம். ஆனால் யாரும் பணம் தரவில்லையாம்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செல்வநாதன், வியாழக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இது குறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT