விழுப்புரம்

மயிலம் அருகே எரிவாயு உருளை வெடித்து பக்கத்து வீட்டுசுவா் சேதம்: போலீஸாா் விசாரணை

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே செவ்வாய்க்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் அருகிலிருந்த வீட்டுச் சுவா் சேதமடைந்தது.

மயிலம் , கூட்டேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ். இவா் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியது. இதில் அருகில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் வீட்டுச் சுவா் பலத்த சேதமடைந்தது.

இது குறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் காமராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், காமராஜ் சமையல் எரிவாயு உருளையை வெடிக்கச் செய்து சுரேஷின் வீட்டுச் சுவரை சேதப்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT