விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே செவ்வாய்க்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் அருகிலிருந்த வீட்டுச் சுவா் சேதமடைந்தது.
மயிலம் , கூட்டேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ். இவா் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியது. இதில் அருகில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் வீட்டுச் சுவா் பலத்த சேதமடைந்தது.
இது குறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் காமராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், காமராஜ் சமையல் எரிவாயு உருளையை வெடிக்கச் செய்து சுரேஷின் வீட்டுச் சுவரை சேதப்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனா்.