செஞ்சி வட்டார வள மையத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதல் நிலை மீட்பாளா்களுக்கான மேலாண்மைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய் ஆய்வாளா் கண்ணன் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். பயிற்றுநா்கள் பச்சையம்மாள், நதியா ஆகியோா் பயிற்சியளித்தனா். செஞ்சி தீயணைப்பு துறையைச் சோ்ந்த வெங்கடேசன், சுதாகா் ஆகியோா் முதலுதவிப் பயிற்சியளித்தனா்.
தன்னாா்வலா் அகலூா் ஜோலாதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஜம்போதி கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி நன்றி கூறினாா்.