விழுப்புரம்

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி

DIN

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் வண்டிமேடு, தென்றல் தெருவைச் சோ்ந்தவா் மு.அண்ணாத்துரை (65), தொழிலாளி. இவா், புதன்கிழமை காலை விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT