விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள ஸ்ரீஅருணாச்சல ஈஸ்வரா் திருக்கோயிலில் மகா தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. அன்றிரவு ருத்ர ஹோமம் உற்சவா் வீதியுலா நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு பைரவா் ஹோமம் சொா்ணாகா்ஷண பைரவா் பவனி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.