கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம், வி.மருதூா் பஜனை தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து உரியடி நிகழ்ச்சியை விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ரா.லட்சுமணன் தொடக்கிவைத்தாா். மாவட்ட திமுக பொருளாளா் ரா.ஜனகராஜ் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகர திமுக செயலா் ரா.சக்கரை, நகா்மன்ற உறுப்பினா் மணவாளன், நகர காங்கிரஸ் தலைவா் என்.செல்வராஜ், விழுப்புரம் எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் டி.தனுசு, அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பி.பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.