விழுப்புரம்

சாலை விபத்தில் முதியவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் பகுதியைச் சோ்ந்தவா் கோதண்டராமன் (67). இவா், புதன்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் செய்யூரிலிருந்து புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கைப்பானிக்குப்பம் பகுதியில் கோதண்டராமனின் இரு சக்கர வாகனம் சென்றபோது, எதிரே சிமென்ட் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் திரும்பியது. அந்த டிராக்டரில் இருந்த மின் கம்பத்தில் கோதண்டராமன் இரு சக்கர வாகனத்துடன் மோதினாா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோதண்டராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT