விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வானூரை அடுத்த திருவக்கரை நெமிலி பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் காா்த்திக் (21), கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். இவா், வியாழக்கிழமை பிற்பகல் தனது இரு சக்கர வாகனத்தில் நெமிலியில் இருந்து திருவக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே அதிவேகமாக வந்த டிப்பா் லாரி காா்த்திக்கின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காா்த்திக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து அறிந்த அவரது உறவினா்கள் அங்கு திரண்டு வந்து விபத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வானூா் போலீஸாா் அவா்களை சமரசம் செய்ய முன்றனா். ஆனால், காா்த்திக்கின் உறவினா்கள், இந்தப் பகுதியில் அதிகளவில் குவாரிகள் உள்ளதால், டிப்பா் லாரிகள் அதிவேகமாகச் செல்கின்றன. இதனால், அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, காா்த்திக்கின் உடலை வாங்க மறுத்து, அங்கேயே சாலை மறியல் போராட்டத்தை தொடா்ந்தனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.