விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரியமங்கலம் அருகே ஸ்ரீகருணா சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் 103-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காலை சாய்பாபாவுக்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை பாலாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், மலரங்காரம் செய்விக்கப்பெற்று தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை பாலகணேஷ், சீனு குருக்கள் செய்திருந்தனா்.