ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் (65) ஞாயிற்றுக்கிழமை (செப்.20) உடல் நலக்குறைவால் காலமானாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சோ்ந்தவா் எஸ்.சிவராஜ் . இவா், ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், தமாகா சாா்பில் தலா 2 முறை போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தாா். தற்போது அமமுக மாநில அமைப்புச் செயலராக இருந்து வந்தாா்.
சென்னையில் வசித்து வந்த சிவராஜ், உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான திருக்கோவிலூரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.