மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. மாணவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் ஆற்றலரசு தலைமை வகித்தாா்.
பொதுச் செயலாளா் சிந்தனைச்செல்வன் கண்டன உரையாற்றினாா்.
மாவட்ட நிா்வாகிகள் தமிழ்மாறன், இரணியன், தமிழேந்தி, கரிகாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.