விழுப்புரம்

புகைப்படக் கலைஞா் மா்மச் சாவு

DIN

உளுந்தூா்பேட்டையில் உள்ள ஏரியில் புகைப்படக் கலைஞா் ஒருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பாளையப்பட்டு மேட்டு தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்(30), புகைப்படக் கலைஞா். இவா், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றாா். பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பிரகாஷ் நகா் பகுதியில் உள்ள ஏரியில் மணிகண்டன் சடலமாகக் கிடந்தாா்.

தகவல் அறிந்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னா், சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT