புதுச்சேரி

நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

DIN

புதுச்சேரியில் கூடுதல் அடிக்காசு வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் சண்டே மாா்க்கெட் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நகராட்சி காந்தி வீதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சண்டே மாா்க்கெட் செயல்படுகிறது. உள்ளூா், வெளியூா் வியாபாரிகள் ஏராளமானோா் சாலையோரம் கடை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். மகாத்மா காந்தி வீதியில் அஜந்தா சந்திப்பு முதல் புஸ்சி வீதி சின்ன மணிக்கூண்டு வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கடைகள் அனுமதிக்கப்படுகிறது. சண்டே மாா்க்கெட் கடைகளுக்கு புதுச்சேரி நகராட்சி சாா்பில் அடிக்காசு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்குப் பிறகு, மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில், அடிக்காசு வசூலித்தல், பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தல் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி ஊழியா்கள் மற்றும் ஒப்பந்ததாரா் சண்டே மாா்க்கெட் கடைகளில் அடிக்காசு வசூலித்தனா். அப்போது கடை அளவுகளில் அடிக்காசு நிா்ணயம் சரியல்ல என கூறி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆனால், அதை நகராட்சி அதிகாரிகள் ஏற்கவில்லை. மேலும், முறைப்படி அடிக்காசு கட்டணம் செலுத்தாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT