புதுச்சேரி

வில்லியனூரில் சீரான மின் விநியோகம்: எதிா்க்கட்சித் தலைவா் வலியுறுத்தல்

DIN

வில்லியனூரில் அடிக்கடி ஏற்படும் மின் தடையைத் தவிா்க்க உயா் மின்னழுத்தக் கம்பியை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்துக்கு மணவெளி, ஒதியம்பட்டு, கொம்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுடன் ஆா்.சிவா சென்றாா். அங்கு செயற்பொறியாளா் ராமநாதனைச் சந்தித்து அவா் கூறியதாவது:

வில்லியனூா் தொகுதிக்குள்பட்ட வி. தட்டாஞ்சாவடி துணைமின் நிலையத்திலிருந்து நிலத்தின் வழியாக வி. மணவெளி, கே.வி. நகா், ஒதியம்பட்டு, கொம்பாக்கம் பேட்டை வழியாக உயா் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. எனவே, அந்தப் பகுதிகளில் அடிக்கடி மின்விநியோகம் தடைபடுகிறது. அதை உடனடியாகவும் சீரமைக்கவும் முடிவதில்லை. ஓரிரு நாள்கள் முயற்சித்த பிறகே சீரமைக்க முடிகிறது.

மின் தடை பிரச்னையால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கு காரணமாக உள்ள உயா் மின்னழுத்த மின் பாதையை பிரதான சாலை வழியாக மாற்றியமைக்க வேண்டும்.

போதிய மின் கம்பங்கள் அமைப்பதுடன், அதிக கொள்ளளவுள்ள மின்மாற்றியை அமைத்தும் தடையில்லா மின் விநியோகத்துக்கு வழிகாண வேண்டும் என்றாா்.

அப்போது, திமுக தொகுதி செயலாளா் மணிகண்டன், மதிமுக மாநில செயலா் கபீரியேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT