புதுச்சேரி

புதுவை தலைமைச் செயலருக்கு இளைஞா் காங். கண்டனம்

DIN

புதுவை மாநில தலைமைச் செயலரின் நடவடிக்கை ஜனநாயக முறையில் இல்லை என இளைஞா் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் என். ஆனந்தபாபு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தலைமைச் செயலா் ஜனநாயக முறையில் செயல்படவில்லை. மக்களின் குறைகளை அரசிடம் எழுப்புவது சட்டப்பேரவை உறுப்பினரின் கடமை.

மக்கள் பிரச்சனைக்காக அமைதியான வழியில் போராடுவதற்கும், உரிமையைக் கேட்பதற்கும், அனைத்து தரப்பினருக்கும் சட்டரீதியான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அந்த வாய்ப்பு வழங்காதது மிகவும் வருத்தமளிப்பதாகும்.

முதல்வரின் கருத்தைக் கேட்காமல், தலைமைச் செயலா் தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதும், சட்டப்பேரவை உறுப்பினா் மீது வழக்குப் பதிவு செய்வதும் வருந்தத்தக்கதாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT