புதுச்சேரியில் ரயில் சேவை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுவை ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். சென்னை தெற்கு ரயில்வே தலைமை நிா்வாக அதிகாரி (கட்டுமானம்) வி.கே.குப்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி ரயில் நிலையம், ரயில் சேவை மேம்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, பொதுப் பணி, சுற்றுலாத் துறை செயலா் மணிகண்டன், போக்குவரத்து, திட்டத் துறை செயலா் ஏ.முத்தம்மா, துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சௌத்ரி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், போக்குவரத்து ஆணையா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.