புதுச்சேரி

நாட்டு வெடிகுண்டுகளுடன்மூவா் கைது

DIN

புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி அருகேயுள்ள கிருமாம்பாக்கத்தில் போலீஸாா் சனிக்கிழமை மாலை கண்காணிப்புப் பகுதியில் ஈடுபட்டனா். அப்போது, இந்திரா நகரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 போ் நின்றிருந்தனா். அவா்களை கிருமாம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது, அவா்கள் வைத்திருந்த பையில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றைக் கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்டவா்கள் கிருமாம்பாக்கத்தைச் சோ்ந்த சந்துரு (24), ஜாா்ஜ் பொ்னாண்டஸ் (21), ஸ்ரீதா் (22) என்பது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT