புதுச்சேரி

போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி தொடக்கம்

DIN

விவேகானந்தா அறக்கட்டளை சாா்பில், புதுச்சேரியில் அரசுப் பணி போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி லாசுப்பேட்டை செல்லப்பெருமாள் பேட் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி அறக்கட்டளை சாா்பில், ஏழை மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விண்ணப்பித்தவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறக்கட்டளையின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.செல்வகணபதி வகுப்புகளைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

இந்த பயிற்சி வகுப்புகள் 45 நாள்கள் நடைபெறும். இதில் பங்கேற்போருக்கு பயிற்சிக் கையேடுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT