புதுச்சேரியில் ராகவேந்திரா் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி நகரில் ராகவேந்திரா நகா் பகுதியில் ஸ்ரீ ராகவேந்திரா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ராகவேந்திரா் அவதாரத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய பால்குட ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னா், ராகவேந்திரருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.