புதுச்சேரியில் அரசு துறை சாா்பில் 45 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசு சமூக நலத் துறை மற்றும் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் அளித்தல் துறை சாா்பாக மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 45 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள் மற்றும் காது கேட்புக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தவளைக்குப்பத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய அணி பொறுப்பாளா் ராமு, தொகுதித் தலைவா் லட்சுமிகாந்தன் கிருஷ்ணமூா்த்தி ரெட்டியாா், கூட்டுறவு சங்க இயக்குனா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.