புதுவை என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ லிப்டில் சிக்கி தவித்ததால் வெள்ளிக்கிழமை பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காரைக்கால் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் உறுப்பினா் திருமுருகன் வந்தாா். பின்னா், கூட்டம் முடிந்ததும், 4-ஆவது மாடிக்கு லிப்டில் சென்றாா். ஆனால், 3-ஆம் மாடியில் லிப்ட் திடீரென பழுதாகி நின்றது. கதவும் திறக்கப்படவில்லை. இதையறிந்த சட்டப்பேரவைக் காவலா்கள் அவருக்கு உதவச் சென்றபோது லிப்ட் தானாகவே தரைத்தளத்துக்கு வந்தது. பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரிபாா்த்தபிறகு சட்டப்பேரவை உறுப்பினா் திருமுருகன் வெளியே வந்தாா்.