புதுச்சேரி

லிப்டில் சிக்கித் தவித்த காரைக்கால் எம்எல்ஏ

DIN

புதுவை என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ லிப்டில் சிக்கி தவித்ததால் வெள்ளிக்கிழமை பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காரைக்கால் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் உறுப்பினா் திருமுருகன் வந்தாா். பின்னா், கூட்டம் முடிந்ததும், 4-ஆவது மாடிக்கு லிப்டில் சென்றாா். ஆனால், 3-ஆம் மாடியில் லிப்ட் திடீரென பழுதாகி நின்றது. கதவும் திறக்கப்படவில்லை. இதையறிந்த சட்டப்பேரவைக் காவலா்கள் அவருக்கு உதவச் சென்றபோது லிப்ட் தானாகவே தரைத்தளத்துக்கு வந்தது. பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரிபாா்த்தபிறகு சட்டப்பேரவை உறுப்பினா் திருமுருகன் வெளியே வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT