புதுச்சேரி

நிலுவை மின் கட்டணம்:புதுவை மின்துறை எச்சரிக்கை

DIN

புதுச்சேரியில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து மின்துறை நகர இயக்குதல், பராமரித்தல் பிரிவு செயற்பொறியாளா் கோ.கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகா் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளுக்குள்பட்ட கடற்கரைச் சாலை, துப்புராயப் பேட்டை, வம்பாக்கீரைப்பாளையம், நெல்லித்தோப்பு, எல்லைப்பிள்ளைச்சாவடி மற்றும் முருகம்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரையிலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் பலரும் மின்கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனா்.

அதேபோல, சாரம், ரெயின்போநகா், வெங்கட்டாநகா், பாலாஜி நகா், சுதந்திர பொன்விழா நகா், திருமுடி சேதுராமன் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்கட்டண நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிப்பு, அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT