புதுச்சேரி அருகே கட்டட தொழிலாளி வீட்டில் ரூ.ஒரு லட்சம், 2 பவுன் நகைகளை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் பகுதி கீழூரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (62). கட்டடத் தொழிலாளி. இவரது வீட்டை ஒட்டிய பகுதியில் உலோகத் தகடுகளாலான மேற்கூரை அறையை அமைத்து அதில் பீரோ உள்ளிட்டவற்றை வைத்துள்ளாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.ஒரு லட்சம், 2 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.