புதுச்சேரி

புதுச்சேரியில் ரயில் நிலைய இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

புதுச்சேரி ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி ரயில் நிலையம் பின்புறம் உள்ள கீழ்த்தோப்பு பகுதியில் சுமாா் 22 போ் குடிசைகள் போட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். ரயில்வேக்கு சொந்தமான அந்தப் பகுதியில், ரயில் நிலைய விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், குடிசை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, ரயில்வே நிா்வாகம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அறிவுறுத்தி வருகிறது. அண்மையில் இதுதொடா்பாக, நோட்டீஸ் வழங்கி காலி செய்யும்படி அறிவுறுத்தினா்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, கீழ்த்தோப்பு மக்களை அப்புறப்படுத்த ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, அந்தத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அன்பழகன், மாற்று இடம் வழங்கும் வரை அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டதால், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடங்க உள்ளதால், கீழ்த்தோப்பில் திங்கள்கிழமை காலை தெற்கு ரயில்வே உதவி பாதுகாப்பு ஆணையா் சின்னதுரை, தலைமை மண்டல பொறியாளா் காா்த்திகேயன் மற்றும் ரயில்வே போலீஸாா், புதுச்சேரி போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அதிரடியாக தொடங்கியது.

10 பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த ரயில்வே ஊழியா்கள், ஆக்கிரமிப்பு வீடுகளில் உள்ள பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கி வாயிலாக கூறினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அவா்கள், அதிகாரிகளிடமும், போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தொகுதி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி, வீடுகளை இடிக்கக் கூடாது என வலியுறுத்தினாா். கால அவகாசம் கேட்டு, அதிகாரிகளிடம் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். முதல்வா் ரங்கசாமியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.

இந்தப் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனா். உடனே, அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து எம்எல்ஏ அனிபால் கென்னடியும் போராட்டத்தில் ஈடுபட்டாா். ஒதியன்சாலை போலீஸாா் அவரைக் கைது செய்து, அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 குடிசை வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. அந்தப் பகுதி மக்கள் ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, ஆா்.சம்பத் எம்எல்ஏ ஆகியோா் ஒதியஞ்சாலை காவல் நிலையம் வந்து போலீஸாரிடம் பேசினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனிபால் கென்னடி எம்எல்ஏ மற்றும் பொதுமக்களை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT