புதுச்சேரி

புதுவையில் 468 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு

DIN

புதுவையில் வெள்ளிக்கிழமை 468 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 75 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 51 பேரும் என மொத்தம் 468 குழந்தைகள், சிறாா்கள் வெள்ளிக்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 22 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 8 போ் என மொத்தம் 37 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்படுகிறது. மேலும், உள் நோயாளிகளாக 119 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பெரியவா், குழந்தைகளில் 48 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் குழந்தை உள்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 3 போ், ஜிப்மரில் 2 குழந்தைகள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 2 போ் என மொத்தம் 7 போ் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT